பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 இன்னும்பல் காட்சிகளைக் கண்ட பின்னும் இன்பத்தைக் காணவில்லை, எனது நெஞ்சு துன்புற்றுத் துன்புற்றுத் துடிக்கு தந்தோ தொழிலாளர் நிலைகண்டு : மூச்சு வாங்க இன்னலுற்றுச் சுமைவண்டி ரிக்ஷா வண்டி இழுக்கின்ற விலங்குநிலை மாந்தர் கண்டேன், துன்னுமழை வெய்யிலிலும் வழியின் ஒரம் துணையோடு வாழ்கின்ற மக்கள் கண்டேன் 4 கடலுக்குள் வலைவீசும் மக்கள் கூட்டம் கரையோரம் வாழ்கின்ருர் : காற்ற டித்தால் தடதடவென் ருே டிவிடும் அவர்கள் வீடு : தவருமல் தெருத்தோறும் கோவி லுண்டு : மடமையொடு சாதிபல உண்டு : பிச்சை வாழ்வினரும் மிகவுண்டு : கண்டி வற்றைத் திடமிக்க என்னுள்ளம் நொந்து சிற்றுார் திரும்பிவந்தேன் ; சிறுமைஎலாம் அழிவ தென்ருே ? -3. 115