பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டிக்காட்டான் நிலைமண்டில ஆசிரியப்பா உழைப்பே என்னுயிர் களைப்பே யின்றி உழுவேன், நடுவேன், உறுகளே எடுப்பேன், கண்ணெனக் காத்துக் கதிர்முற் றியபின் அறுப்பேன், சுமப்பேன்; ஆண்டை வீட்டில் நிறைப்பேன், மகிழ்வேன், கிலத்தவர் மகிழ்வார் இல்லம் செல்வேன் என்மனே யாட்டி எலும்புடன் தோலாய் இருக்கும் பிள்ளையை அடித்திடல் கண்டதும் அடித்ததேன் ? என்பேன் "சோறு சோறெனச் சொல்லி அழுதால் சோற்றுக் கெங்கே போவது ? சொல்வீர்” என்டாள் வல்லிடி இதயம் பாயும் ; களஞ்சியம் கிறைத்தோம் கஞ்சி இல்லை காலம் வருமெனக் கலங்கி இருந்தேன்; இவ்வகை வாழ்நாள் இயங்க ஒர்நாள் நோயுற் றுடலம் கொங்தேன் பின்னர்த் தொடர்ந்தது நோய்தான் தொல்லைகள் உற்றேன் உள்ளூர் மருத்துவர் உரைத்த மருந்துகள் உண்டேன் பயனிலை ; ஒருவர் வந்தார் o 116 5 10 15