பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"அற்பனே! இவ்விடம் அருச்சனை மட்டும்
நடத்துவோம் நடந்திடு அங்கே’’ என்றார் :
அருச்சனை மட்டும் ஆண்டவர் ஏற்பார்
முடிநீர் எடுத்தால் முகஞ்சுளிப் பாரோ ?
என்றேன் : அங்கே இருந்த பட்டை 50
நாமம் போட்டவர் "நாயே பேயே’
என்றெலாம் பேசி இடித்தார் அடித்தார் :
ஐயா என்னை அடிக்க வேண்டாம்
உயர்ந்த சாதியை உவப்பார் கடவுள்,
நாவிதன் தாழ்ந்தவன் நயவார் அவனை 55
என்றதால் இவரை என்முடி எடுக்க
வேண்டினேன் தவறோ ? விளம்புவீர்!’ என்றேன் ; "பட்டிக் காட்டான் பட்டிக் காட்டான்'
என்றெனை இகழ்ந்தார் அங்கிருந் தோரே.
&

118