பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

இருக்கிறது என்கிருர். காலத்திற்கு ஏற்ற உவமை என் பீர்கள். அது மட்டுமன்று, கவிஞர் வாழ்ந்த காலத்துக் கொடுமைகளுள் ஒன்றை, உள்ளபடி காட்டும் கண்ணுடி யும் ஆகும்.

இவ்வாறு பாடிச் செல்லும் வண்ட  'அடைைபட்டுக் 

கிடக்கவெனச்'சொல்லி 'அல்லிமலர்க் கூட்டம்'குவிந்து கொண்டதாம். இக் கற்பனை, இத்தகைய கொடுமைகட்கு எதிர்காலத்தில் எத்தகைய முடிவு உண்டு என்பதையும் நமக்குச் சொல்லி வைக்கின்றது.

நீங்கள் பொதுக் கூட்டங்களுக்குப் போயிருக்கிறீர் 

கள்; அங்கு ஒரு கட்சிக்காரர் பேசும்போது, மற்ற கட்சிக் காரர்கள் குழப்பம் விளேவிப்பதுண்டு. இது முறையாகுமா? வெறும் வன்முறைச் செயலுக்காக அஞ்சி, மதியுடையவர் கள் மீண்டும் மேடை எருது இருப்பார்களா? இக் குழப் பம், இந்த உலகத்தில் மட்டுமென்ன, வானுலகத்திலும் நடைபெறுகிறது.

விண் மீன்களின் பெருங் கூட்டத்திடையே மதியர் 

என்னும் அம்புலியார் மேடை ஏறிச் சொற்பொழிவு செய்கிருர். இதைப் பொறுக்காத எதிர்க்கட்சி முகிலன் விளக்கை அனைத்து ஒளியை மறைத்தான். இடியிடித்துக் குழப்பத்தை உண்டாக்கினன். முடிவு என்ன? மீண்டும் அமைதி நிலவுகிறது; கூட்டம் கலேயவில்லை. மதியர் மீண் டும் மேடை ஏறிவிடுகிருர் விடியும் வரை சொற்பொழிவு நிகழ்கிறது.

'மதியுடையர் பேசுவதைக் கேட்டல் நன்று
மாண்புவரும் எனக்குழுமும் விண்மீன் கூட்டம்