பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இன்பங் காணுக! துன்பம் நேரின் 20
துணிவுடன் அதனைத் துணையுடன் எதிர்க்க!
அன்பைப் பாய்ச்சி இன்முகங் காட்டி
வாழ்முறை தெரிந்து வாழ்க! ஒருவர்
குற்றம் புரியின் மற்றவர் பொறுக்க!
இதுவே வாழ்க்கை இதுவே மணமாம் 25
உலகில் ஒருவர் மற்றவர்க் குறுதுணை
ஆமெனும் உண்மை அறியச் செய்வது
திருமண மேயிதைத் தெரிந்து வாழ்க!
சமத்துவம் நும்பால் தழைத்திடச் செய்தே
எடுத்துக் காட்டென இலங்குக இனிதே!30