பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மன்னர் ஆட்சி

எண்சீர் விருத்தம்

1

ன்னாட்சி என்னுஞ்சொற் கேட்டாற் போதும்
மனங்குழம்பி வாய்பிதற்றி வெறுத்துச் சொல்வோர்
என்னாட்டில் இருக்கின்றார் அவர்க்குச் சொல்வேன்;
எங்கெங்கோ கொடுங்கோலர் ஆட்சி செய்தார்
அந்நாட்டார் வெறுத்துரைத்தல் இயல்பே யாகும்;
ஆருயிராய்ச் செங்கோன்மை புரிந்து வந்த
இந்நாட்டில் தமிழகத்தில் மன்னர் ஆட்சி
இகழ்ந்துரைப்போர்க் கெஞ்சுவது பழியே யாகும்

2


குடிபுரக்கும் படியிருக்கும் மன்னர் ஆட்சி
கொடுங்கோன்மை கண்டறியா நிலையி ருக்கும்;
மடிசுரக்கும் ஆவினைப்போல் மக்கள் வாழ்வில்
வளஞ்சுரக்க அருள்சுரக்கும் அவர்தம் நெஞ்சம்;
முடியிருக்கும் வாளிருக்கும் வெற்றி கூறும்
முரசிருக்கும்; குடியாட்சிப் பண்பே அங்குக்
குடியிருக்கும்; இவ்வுண்மை அறிய கில்லார்
குறைகூறின் அவர்மதியில் பழுதி ருக்கும்

199