இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3
மொழிவளர்த்தார் கலைவளர்த்தார் அறம்வ ளர்த்தார்
- முறைபிறழும் நிலைவருமேல் அறிஞர் நல்ல
மொழியுரைக்கச் செவிகொடுத்தார்; கற்பின் செல்வி
- மூண்டெழுந்த சீற்றத்தால் கடிந்து ரைத்துப்
பழியுரைத்தாள் உயிர்கொடுத்தான் பாண்டி மன்னன்;
- பார்த்ததுண்டோ குடியரசில் இதுபோல் மேன்மை
இழிவுரைக்க முயலாதீர்! உயர்ந்த தென்றே
- இயம்பிடுக சங்கத்து மன்னர் ஆட்சி