பக்கம்:முடியரசன் கவிதைகள்-1-2.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3



மொழிவளர்த்தார் கலைவளர்த்தார் அறம்வ ளர்த்தார்

முறைபிறழும் நிலைவருமேல் அறிஞர் நல்ல

மொழியுரைக்கச் செவிகொடுத்தார்; கற்பின் செல்வி

மூண்டெழுந்த சீற்றத்தால் கடிந்து ரைத்துப்

பழியுரைத்தாள் உயிர்கொடுத்தான் பாண்டி மன்னன்;

பார்த்ததுண்டோ குடியரசில் இதுபோல் மேன்மை

இழிவுரைக்க முயலாதீர்! உயர்ந்த தென்றே

இயம்பிடுக சங்கத்து மன்னர் ஆட்சி