இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
3 எத்தனையோ அருநூல்கள் செல்லார்கட்
கிரையாக்கி விட்டோம், மேலும்
பித்தரைப்போல் மூடரைப்போல் பதினெட்டாம்
பெருக்கென்றும் ஆற்றி லிட்டோம்,
இத்தனையும் போதாமல் சங்கத்தில்
இருந்தவற்றை நீயும் கொண்டாய் !
கத்துதிரைப் படையெழுப்பி ஏனின்னும்
கரைநோக்கி வருகின் றய்நீ ? 4
சங்கத்து நிலவியஙல் இலக்கியத்தை,
சகமெல்லாம் புகழ்ந்து போற்ற
வங்கத்து வணிகத்தால் ஒங்குபுகார்
வளமிக்க நகரை, எங்கள்
சிங்கத்தை நிகர்பனனீிர்ச் செல்வத்தைச்
செத்தொழியச் செய்தாய்! அங்தோ!
கங்கொத்தும் அலைகடலே! எமையிங்கு
கலங்கிமனம் இரங்க வைத்தாய் 5
அன்றிழைத்த தீமையெலாம் போதாவென்
றவினங்கள் உயிர்போய் மாள நின்றிருந்த உயர்மரங்கள் வீடெல்லாம் நிலைவீழ மக்கள் தம்மைக்
கொன்றழித்து நாகையினைச் சுவைத்தாயோ?
கொழிதரங்கம் பாடி என்ன
இன்றிருக்கும் ஊரினையும் அலைக்கையால்
இழுப்பதற்கோ சென்றய் அங்கே? 46