பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 7. நடைமுறைச் சமுதாயவியல்-பொருளியல் கல்வியியல் கட்டுரைகள் (அ) நடைமுறைச் சமுதாயவியல் கட்டுரைகள் மனிதர்களின் கூட்டமே சமுதாயமாகும். அச் சமு தாயம் பல செயல்களை உள்ளிட்டது. சமுதாயத்தின் தேவைகள் யாவை? அவற்றைப் பெற எவ்வாறு முயல வேண்டும்? என்பன பற்றியும், சமுதாயத்தில் அமைந்து கிடக்கும் உயர்வு தாழ்வு பற்றியும், ஏழை பணக்கார வாழ்வு பற்றியும் அறிந்து, அவற்றின் உண்மை கிலே களே ஆய்ந்து எழுதுவது இக் கட்டுரையின் பாற்படும். மேலும், சமுதாயத்தில் பெண்கள் கிலேமை குறித்தும், பெண்ணடிமை, கைம்மை, குழந்தை மணம் முதலியன பற்றியும் எழுதுவதும் இத் தலைப்புடைய கட்டுரைகளின் கீழ் அடங்கும். கம்முடைய சமுதாயம் முன்னேற வழிவகை கண்டு உழைத்த சான்றேர் பலர். அவருள் இராசாராம் மோகனர், பாரதியார், காந்தியடிகள், விவேகானந்தர், இராமலிங்க அடிகள் போன்றேர் எழுத்தாலும், பேச் சாலும், செயலாலும் தொண்டாற்றினர். அவர்கள் இயற்றிய நூல்களைப் பயின்று குறிப்புக்களைத் திரட் டிக் கீழ்க் காணும் தலைப்புக்கள் குறித்துக் கட்டுரைகள் வரைந்து பழகுக. (1) சமுதாயத்தில் கம் கடமை (2) சமுதாயமும் சமயமும் (3) சமுதாயத்தில் பெண்கள் கிலே (4) தன் னலமும் பொதுகலமும் (5) கம் இந்தியச் சமுதாய நிலை (6) மங்கையர் முன்னேற்றம் (7) வாழ்வு வளம் பெற ... (3) காடு வாழ வேண்டுவன (9) இராமலிங்க