பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 மேற்கண்டவாறு வாழ்க, உண்க என்னும் வியங்கோள் வினைமுற்றுச் சொற்கள், இருதினே ஐம்பால் முவிடங்களுக்கும், ஒருமை பன்மைக்கும் பொதுவினைகளாக வரும். இங்ாவனம் இருதினை ஐம்பால் மூவிடங்களுக் கும், ஒருமை பன்மைக்கும் பொதுவாக வரும் வினைச்சொற்களும், முக்காலங்களுக்கும், தன் வினே பிறவினைக்கும், உடன்பாட்டுவினை எதிர் மறைவினைக்கும், செய்வினை செயப்பாட்டுவினைக் கும், பெயரெச்சம் வினையெச்சத்திற்கும் பொது வாக வரும் வினைச்சொற்களும் பொதுவினைகள் எனப்படும். தன்மை ஒருமை வினைமுற்றுக்களும், தன் மைப் பன்மை வினைமுற்றுக்களும், முன்னிலை ஒருமை வினைமுற்றுக்களும், முன்னிலைப் பன்மை வினைமுற்றுக்களும், வியங்கோள் வினைமுற்றுக் களும், வேறு-இல்லை-உண்டு என்னும் முன்று வினைக்குறிப்பு முற்றுக்களும், பெயரெச்சங்களும், வினையெச்சங்களும், செய்யும் என்னும் முற்றும், யார், எவன் என்னும் வினவினைக்குறிப்பு முற்றுக் களும், மேலும் சில வினைச்சொற்களும் பொது வினைகளாக வரும். இனி, அவற்றைப்பற்றி விரிவாகக் காண் போம். (தன்மை ஒருமை வினைமுற்றுக்கள்) (இருதினைப் பொதுவினை) யான் உண்டு (உண்டேன்) யான் வந்து (வந்தேன்) இறந்த காலம் யான் சென்று (சென்றேன்)