பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 கவியரசர் முடியரசன் படைப்புகள்-1 எழுச்சி மட்டுமா தோள் தட்டுகின்றது? கூடவே இயற்கையா அமையும் சொல்வண்ணம், இன்னிசையாகவே அமையு சந்த நயம், எண்ணச் சிறப்பாகவே மலரும் உவமையின்பம் அத்தனையும் கவிதை ஒவ்வொன்றுடனும் நடைபோட்டு செல்கின்றன. - அவை மட்டுமன்று. குறிப்பாக இன்னும் ஒன்றைக் கூற வேண்டும். தடம்புரண்டு தம்போக்காய் எழுதுவதுதா தற்காலக் கவிதை இலக்கியம் என்னும் தவறான கருத்து கொண்டிருக்கும் இன்றைய எழுத்துலகில், தமிழ் மர வழுவாமலும் தரம் குறையா மலும் கவிதைகளை ஆக்கித் 驅 மற்றும் கவிதைகள் முழுவதிலும் ஆசிரியரின் பழந்தமிழ்ப் புலமையும் பாட்டுத்திறனும் ஒருங்கே பரவிக் கிடக்கின்றன. - என்றாலும் மிகையன்று. உண்மையில் பேராசிரியர் டாக்டரி அ.சிதம்பரநாதனார் தந்துள்ள முன்னுரை இந்நூலுக்குப் பொன்னுரையாகவே பொலிந்து அழகு செய்கிறது’ தந்துள்ளார் கவிஞர். - தமிழழகன் 4. 4, 4 ** *్మ* ** 'வீரகாவியம்’ என்னுங்காப்பியம் குறித்து 1971 பிப்ரவரி வெளி வந்த நித்திலக்குவியல்' என்னும் திங்கள் இதழில் எழுதப் பட்ட மதிப்புரை, ‘வாழுங் கவிஞர்களில் சிறப்பாகத் தனக்கெனத் தனித் திறனும் தனி நடையும் பெற்றுள்ள முன்னணிக் கவிஞரான திரு. முடியரசன் இவ்வீரகாவியத்தை இயற்றியிருக்கிறார். பழந்தமிழ்ச் சமுதாயத்தின் இரு கண்களான வீரமும் காதலும் இக்காவியத்தில் பூத்துச் சிரிக்கின்றன. சூரியன் மறைவதனை ஒரிடத்தில் காதலனும் காதலியும் கருத்தொருமித்துக் கலந்தபோது நாமேன் தடையாக இடையில் இருக்கவேண்டும் என நினைந்தான் போல் கதிரவன் மறைந்தான் என்று அழகாகக் கூறுவதோடு நில்லாமல் இன்னும் சிகரம் வைத்தாற்போல அந்தக் கதிரவன் உலகியலின் திறமுணர்ந்தோர் செயலே செய்தான் - என்று கூறுவது நெஞ்சில் பதிகிறது.