பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 209 காளையும் கன்னியும் முதலிரவில் கூடுகின்றனர். அதனை ஆசிரியர். ' - 'நூலறியார் கலிநுகரப் புகுதல் போல நுழையினும்பின் சொலற்கரிய இன்பங் கண்டார்’ - என்ற நயமான நுட்பமான உவமையால் உணர்த்துகின்றார். இந்நூல் மிக விரைவான, தெளிவான நடையோடு உணர்ச்சிச் சுழியிட்டு ஒடுகின்றது. கவியுலக வரலாற்றுப் பொன்னேட்டில் தனது வெற்றிச் சுவட்டினைத் தெளிவாகப் பதித்துள்ளவர்தான் முடியரசன். என்றாலும் இந்நூல் அச்சுவட்டினை இன்னும் அழுத்தமாகப் பதித்துள்ளது' -புலவர் பொன்னரசன்.