பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் 219 அடிக்கடி எனக்கு ஆறுதல் கூறுவார் கவலைப்படாதீர்கள்! எதிர்காலத்தில் உங்கள் காலடியில் ஆயிரம் ஆயிரமாகக் கொண்டு வந்து கொட்டுவார்கள் இவ்வாறு கூறுவார். அவர் சொற்படி 'கொட்டுவது உண்மைதான். பணம் அன்று. பற்றாக்குறை யென்னும் தேள்தான் கொட்டுகிறது. என் மனத்துக்குத் தேறுதல் கூற அவ்வாறு கூறுவார். என் மகள் திருமணத்திற்கு வந்திருந்த பேராயக் கட்சித் தோழர் ஒருவர், அண்ணன் எளிமையைக் கண்டு வியந்து, மேலவை மறுப்பினராக இருந்தும் இவ்வளவு எளிமையாகப் பழகுகிறாரே எனப் பாராட்டினார். பாவேந்தர் பாரதிதாசன் இயல்பு ஊரறிந்த செய்தி, திடீரென்று வெகுளியின் உச்சியிலே நிற்பார். அடுத்த கணமே குழுந்தையாகி விடுவார். அவருடன், அழலின் நீங்கான்அணுகான்அஞ்சிப் பழகுதல் வேண்டும். அவர்க்கும் அண்ணனுக்கும் நெருக்கமான தொடர் புண்டு. அதனால் அவருடைய இயல்புகளை அண்ணன் நன்கு தெரிந்து வைத்திருந்தார். என்னுடன் அண்ணன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். என்னுடன் அவர் சரிசமமாகப் பழகினும் நான் அவரை என் மூத்த அண்ணன் என்ற முறையிலே மதித்து நடந்து வருபவன். பாவேந்தருக்கும் எனக்குமுள்ள இயல்பு வேறுபாட்டை நன்குணர்ந்த அண்ணன், தமதுநூலில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார். “இப்படியெல்லாம் பாவேந்தரோட புத்தகம் சம்பந்தமா பல அனுபவங்கள் உண்டு. ஆனா, "எழில்' பத்திரிகையிலே, கவிஞர் முடியரசனோட ஏற்பட்ட அனுபவங்கள் வேற மாதிரி! முடியரசன் கவிதைகளிலே வேகம் இருக்குமே தவிர, நடை முறை வாழ்க்கையிலே ரொம்ப அமைதியானவர். பாரதிதாசன் வழிவந்த கவிஞர்களிலே முடியரசன் முக்கியமான 17 கவிஞர். ஈரோட்டு நடராசன் என் வாழ்க்யிைல் முதன்மையிடம் பெறுவது ஈரோடு. எனக்கு ஒப்பிலாத் தலைவரையும் உற்றுழியுதவும் தோழரையும் தந்தது அத்திருநகரமே. --