பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Tতচা கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 வழுதி : ஒருமை ஒற்றுமை ஆயிரு சொல்லின் பொருண்மை யொன்றோ . . . . நாகனார் : . . . . . . புகலும் கேண்மின் ஒன்றுடன் மற்றொன் றிணைவ தொற்றுமை; ஒன்றினுள் ஒன்று பொன்றுவ தொருமை: இணைந்தும் தனித்தும் இயங்குவ தொற்றுமை, அணைத்தபின் ஒன்றா யமைவ தொருமை: அடுக்குத் தொடர்போல் அமைவு தொற்றுமை: இரட்டைக் கிளவியென் றிருத்தல் ஒருமை: வழுதி : இரண்டும் ஒன்றென் றிருந்தோம் தெளிவுறத் திருந்தும் பொருண்மை தேர்ந்தெமக் களித்தீர்; நாகனார் விந்தை மீதூர் வியன்பெறு செல்வம் முந்தையர் நமக்குத் தந்தவை பலப்பல; கூம்பாச் செல்வம் ஒம்பா நிலையிற் சோம்பித் திரியிற் றொகுத்தவை பாழாம்: போதும் அவையெனப் பொந்திகை பெறுதல் தீதாம்; ஆதலின் தெள்ளிய புலத்திற் கூரறி வுக்கலங் கொண்டுழு வோர்தாம் ஊரினர் உணக்கரு வூலம் நிரப்பிப் புரத்தல் வேண்டும் புதுவன விளைத்து: குழலி : முந்தையர் முனைந்து தந்தவை யனைத்தும் உந்தும் உணர்வின் ஒம்புதும் ஒம்புதும்: வழுதி : ஈட்டுதுஞ் செல்வம் கூட்டுதும் மிகவே நாட்டிற் பெரும்புகழ் நாட்டுதும் யாமே. -அஆஅ