பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டியன் நாகனார் பாண்டியன் நாகனார் காட்சி 5 வாட்படை தாங்கும் வலந்தரு பாண்டியன் மீப்படு புலமை விஞ்சிய புலவரொடு அரண்மனை ஒருசார் அமர்ந்தன னாகி ஒருமகன் வழுதியின் திருமணங் குறித்துக் கலந்துரை யாடக் கயல்விழித் தேவியும் மகிழ்ந்துரை யாடினள் மாலைப் பொழுதே. O O. O. O. (புலவர் வருகிறார்) வண்டமிழ்ப் பெரியீர் வருக வருக அண்டை யிருக்கையில் அமர்ந்தருள் புரிக (இருக்கையில் அமர்ந்து) ஒப்பருந் தேவியோ டொருங்கினி திருந்த வெப்பகல் மார்பநின் மெய்ப்புகழ் வாழ்க எப்பொருட் டாக எனையிங் கழைத்தனை? நாளைய வேந்தன் நம்மகன் வழுதிக் காளையின் தகவுகள் கலந்துரை யாடஇவ் வேளை நுமது வருகை வேண்டினம்; வைய மாந்தர் மனத்துறு கருத்தைக் கையாள் உரைசெயுங் காலம் இரியப் பைய நாவை யசைத்த பழந்தமிழ் ஐயன் கற்றுள ஆற்றல் பெரிதுமன்: