பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழுதி காட்சி 7 பொங்கும் வையைப் புதுப்புனல் விழவில் மங்கை குழலியும் மைந்தன் வழுதியும் ஆங்காங் குறீஇ இவ்வன தீது கண்டு தேங்கும் மகிழ்விற் றிளைத்தனர் பகலே. O O. O. O. நீரணி விழவில் நிமிர்த்த வேட்கையர் போரணி வகுத்த பொருநர் மானச் சேறல் காணுதி சேயிழாய் ஆங்கன் ஏதம் அறியா இனிய வாழ்க்கையர் ஒதும் வாழ்த்தொலி ஒங்குதல் கேள்நீ நிறைகடற் புகுந்து பொறையொடு பெயர்ந்து குருநிற வானிற் றிரிதரு கொண்டு தன்சுமை பொறாஅது தலைமலைப் பொழிய ஒருவழிக் கலந்தவை பெருகித் திரண்டு வருவது காணுதி வையை யாற்றில்: புதுப்புனல் வையையிற் புகுந்துநீராட மதுக்குழல் மாதர் நெருக்கின ராகி, புகைக்கும் அழலும் பூசனை பொருளும் வகைப்பட ஏந்தி வழிவழி ஊர்ந்த நடையின ராகிக் குடைவதற் கேற்ற உடையணி பூண்டு மிடைவது காண்க: