பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்ெ பருவழுதி வழுதி குழலி வழுதி குழலி வழுதி வழுதி நரையர் மெலியர் நடுங்குநர் சிறியர் துறைதுறை நின்று தூநீ ரயர்ந்தும் வலியர் இளையர் வணங்காக் காளையர் கலிபுனற் பாய்ந்து கண்சிவந் தாடியும் பருவப் பண்பினைப் பாங்குற வுணர்த்தும் இருபெரு நிலையும் இவ்வுழி நோக்குதி விண்டோய் முகட்டின் விளிம்பின் இழிதரும் தண்டா அருவி தண்டிப் பெயர்த்த வேயும் அகிலும் விளைந்த தேக்கும் காயுங் கனியும் கடிமணச் சாந்தம் வேருந் தூறும் விளைவுறு கிழங்குடன் நனைவிரி மலர்கள் நறவு கெழீஇய இனையன பலவும் ஏந்தி ഞഖങ്ങധ് திருமண வரிசைப் பொருளொடு பெயரும் ஒருமகள்போல ஒழுகுதல் நோக்குக: வேண்டி மனங்கெழும் பாண்டி மைந்தற் தீண்டும் வரிசை யாது கொணர்வை? என்னை விரும்புதி எனயான் நினைந்துளேன் பொன்னை விழையும் நின்னுள மாகின் என்னிற் சிறந்த தெதுவென இயம்புக முன்னவள் அதனை முந்தித் தருகுவல்: பொன்னே நின்னிற் சிறந்தது புகல என்னே ஈங்குள தென்னுயிர் நினக்கே: | நின்னுயிரொன்றோ? பொன்னுட லிஃதும் என்னரிப் பொருளென இயம்புதி தலைவ: உயிரோ உடலோ உரிமை எனக்கிலை அயில்வேல் விழிநின் அடைக்கலம் அவைதாம்: பேதாய், நிலையா. உயிருடல் நிலைப்பவை என நினைந் தலைவார் உலகில் அவர்நிலை அளிதே'