பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஐந்தாம் அதிகாரம்
குலோத்துங்கன் சோழமண்டலத்தில் முடிசூடுதல்

திராசேந்திரசோழன் இறந்தபிறகு சோழநாடு அரசனின்றி அல்லலுற்றது. குறுநிலமன்னரது கலகம் ஒருபுறமும் உண்ணாட்டுக்குழப்பம் மற்றொருபுறமும் மிக்கெழவே, சோழநாட்டு மக்கள் எல்லோரும் அமைதியான வாழ்வின்றி ஆற்றொணாப் பெருந்துன்பத்துள் ஆழ்ந்தனர். கலிங்கத்துப்பரணியின் ஆசிரியராகிய சயங்கொண்டார்,

"மறையவர் வேள்வி குன்றி மனுநெறி யனைத்து மாறித்
துறைகளோ ராறு மாறிச் சுருதியு முழக்க மோய்ந்தே

சாதிக ளொன்றோ டொன்று தலைதடு மாறி யாரும்
ஓதிய நெறியி னில்லா தொழுக்கமு மறந்து போயே

ஒருவரை யொருவர் கைமிக் கும்பர் தங் கோயில் சாம்பி
அரிவையர் கற்புச் சோம்பி யரண்களு மழியவாங்கே[1] கலியிருள்பரந்தது"

என்று இக்குழப்பத்தை அந்நூலிற் கூறியுள்ளார். அன்றியும் சோழநாடு அக்காலத்தில் அரசனின்றி அல்லலுற்றிருந்த செய்தியை,

 
“அருக்க னுதயத் தரசையி லிருக்கும்
கமல மனைய நிலமகள் தன்னை
முந்நீர்க் குளித்த அந்நாள் திருமால்


  1. க. பரணி - தா. 245, 246, 247.