பக்கம்:முதுமைக் காலத் தொல்லை பூச்சிகளினால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

முதுமைக் காலத் தொல்லை, பூச்சிகளினால் ஏற்படும்


கொசுக்களை அடியோடு விரட்டுவது என்றால், வீடு முழுவதும் சாம்பிராணியுடன், சிறிது வேப்பம் இலைகளைச் சேர்த்து புகை தூபம் போட்டுப் பாருங்கள். கொசு அடியோடு ஒழியும்.

அதுபோலவே சாம்பிராணியுடன் நொச்சிலி இலையைக் கலந்து புகை தூபம் போட்டுப் பாருங்கள் கொசுக்கள், புகை துயத்தைக் கண்டால் காத தூரம் ஓடிவிடும்

இந்தப் புகை போடும் பழக்கத்தை வீடுகளின் அறைகள் தோறும், அடுத்தடுத்து செய்து கொண்டே இருந்தால், கொசுக்கள் துன்பங்கள் நம்மைவிட்டு அகலும் எந்த நோயும் நம்மைச் சூழாது என்பது நிச்சயம்!

எனவே, நமது வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.செடிகொடிகள், மரம் மட்டைகள் வளர்க்கும் எண்ணமிருந்தால், அவற்றை வளர்க்க எவ்வளவு ஆசை உண்டாகின்றதோ அவ்வளவு ஆசைகள், வீட்டைச் சுற்றிச் சுத்தமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறையிலும் ஒவ்வொரு வீட்டாருக்கும் ஆசைகள் இருக்க வேண்டும்.

அந்த எச்சரிக்கை இல்லாவிட்டால், அந்தக் கண்காணிப்பில் நாம் தவறிவிட்டால், அந்தப் பாதுகாப்பிலே இருந்து நாம் பாராமுகமானால், நிச்சயம் பாம்பு கடிக்கும், தேள் கடிக்கும், விஷப் பூச்சிகள் கடிகளுக்கும். கொசுக்களது கடிக்கும் நாம் பலியாவோம் என்பது உறுதி! இல்லையென்றால், நமது பணம் எல்லாம் டாக்டர்களே சாப்பிடுவார்கள் என்பது நிச்சயம் இதுவா வாழ்க்கை?


✽✽✽✽