பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

邑 இல்லற நெறியாளர் 127 கூடியிருக்கும் அனைவரும் வாழ்த்துவதாக அனைவர் சார்பிலும் மணமக்கள் தலைவரின் வாழ்த்து பெறுகின்றனர். மணமக்களாகிய இருவரும் பன்னெடுங்காலம் நல்ல உடல் நலத்துடனும் மனவளத்துடனுமிருந்து, நன்மக்களைப் பெற்று, இயன்றவரை பல மொழிகளை ஆய்ந்து, தமிழை ஆழமாகக் கற்றறிந்து, நல் மக்களோடு பழகி, நல்வழியில் பொருளீட்டி, சிக்கனத்தையும் சேமிப்பையும் கடைப்பிடித்து, சேமிப்பை நல்ல அறவழிகளில் செலவிட்டு நாட்டுக்கும் மொழிக்கும் மக்களுக்கும் சமூகத்திற்கும் செய்ய வேண்டிய நற்றொண்டுகளைச் செய்து நல்வாழ்வு வாழவேண்டும் என முழுமனத்துடன் வாழ்த்தப்படுகின்றனர். அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. (45) மங்கலம் என்ப மனைமாட்சி; மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு. (60) -பொய்யாமொழிகள்.