பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருத்துவ மாமணி தமிழ் மொழியிலுள்ள அனைத்தையும் அழியாமல் பாதுகாக்கவேண்டும் என்ற கொள்கைப் பிடிப்புடையவர் திருச்சி தந்த செம்மல் விசுவநாதம். அவற்றுள் ஒன்று தமிழ் மருத்துவம். சித்த மருத்துவமும் தமிழ் மருத்துவமும் ஒன்றேயாகும். இம்மருத்துவம் தோன்றிய காலத்தைக் கணக்கிட்டுக் கணிக்க இயலாது. அப்படிக் கணக்கிட்டுக் கூற வேண்டுமானால் தமிழகத்து மண்ணில் செடி கொடிகள் தோன்றிய காலமே தமிழ் மருத்துவம் தோன்றிய காலம் என்று சொல்லிவைக்கலாம். நாட்டு வைத்தியம்’ என்று பொதுவாகக் குறிப்பிடப் பெறுவது மூன்றை, ஒன்று சித்த மருத்துவம்; இரண்டு ஆயுர்வேதம்; மூன்று யுனானி, தமிழ் மருத்துவத்திற்கு மொழி தமிழ்; ஆயுர் வேதத்திற்கு மொழி வடமொழி (சம்ஸ்கிருதம்) யுனானிக்கு மொழி உருது. யுனானினிக்குத் திசைமேற்கு:ஆயுர் வேதத்திற்குத் திசை வடக்கு; சித்த மருத்துவத்திற்குத் திசை தெற்கு. தமிழ் மருந்துகள் பெரும்பாலும் பொடியும் கியாழமுமாக இருக்கும். இதனை பசுபம் (பஸ்பம்) என்றும் கஷாயம் என்றும் சொல்வர். ஆயுர் வேதமருத்துவம் பெரும்பாலும் தைலமும் திராவகமுமாக இருக்கும். யுனானி மருந்துகள் பெரும்பாலும் அல்வாவும் இலேகியமுமாக இருக்கும்.