உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முன்னும் பின்னும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

முன்னும் பின்னும்

நூல் : கிராமபோன் சங்கீத கீர்த்தனாம்ருதம் (1930), பாடல் : 12, பக்கம்: 10

ஏறாத மலைதனிலே... வெகு
             ஜோரான கௌதாரிரெண்டு
தாராளமா இங்கே வந்து
             ததிங்கிணதோம் தாளம் போடுதையா.

படம் : தூக்கு தூக்கி, பாடலாசிரியர் : அ.மருதகாசி, பாடியவர் : டி.எம். சௌந்தரராஜன், இசை : ஜி. ராமனாதன்.

🞸

நம்பாதே
உன்னையே நம்பாதே கண்ணையும் நம்பாதே
ஒருநாளும் மோசம் போகாதே (நம்பாதே)

படம் : நல்லவன் (1955), பாடல் : தஞ்சை ராமையாதாஸ், இசை : எம்.எஸ். ஞானமணி.

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்
உண்மையில்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது.

படம் : நினைத்ததை முடிப்பவன் (1975), பாடலாசிரியர் : அ. மருதகாசி, பாடியவர் : டி.எம். சௌந்தரராஜன், இசை : எம்.எஸ். விஸ்வநாதன்.

🞸

கண்ணை மட்டும் நம்பாதே!
கருத்தை மட்டும் இழக்காதே!

படம் : மனமுள்ள மறுதாரம் (1958), பாடலாசிரியர் : அ. மருதகாசி, பாடியவர் : ஜிக்கி, இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்.

🞸

வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்
குடியுயரக் கோலுயரும்
கோலுயரக் கோனுயரும்
– ஒளவையார்
நீர் இருந்தா ஏர் இருக்கும்
ஏர் இருந்தா ஊர் இருக்கும்
ஊர் இருந்தா உலகத்திலே