இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
25
தேவாதி தேவா திருமுரு
- காவள்ளி சேர்கணவா
போவா திரும்பி எனநவி
- லாவண்மை பூத்தவனே
சாவாதி துன்பத்தை நீக்கும்
- பிரான்மரு தாசலனே
நோவா திருவென வந்தெனக்
- கோர்சொல் நுவலுவையே. (59)
நுவலற் கினிய புகழுடை
- யாய்கண்கள் நூறுபல
குவியப் பெறுகினும் கண்டடங்
- காஎழில் கொண்டவனே
தவலற்று மாறா இளமை
- படைத்தமைந் தாஅடியார்
கவலைப் படாமல் மருதா
- சலத்துருக் காட்டினேயே. - (60)
காட்டினே யேல்எளி யேன்காண்பன்
- தண்ணென் கருணையினல்
ஊட்டினே யேலதை உண்பன்நல்
- லோர்கள் உறவெனக்குக்
59. இப்போது போ, பிறகு திரும்பி வா என்று சொல்லாத வள்ளல் தன்மை. சாவு ஆதி துன்பத்தை பிரான்: விளி.
60. பல நூறு. தவல் அற்று-அழிதலற்று.