பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி, திருப்புகழ் உரை 381 காமலீலை செய்யும்பொழுதில் (தம்மிடம் வந்துள்ள) அவரவருடைய GIJITILJIGU இடுபவரும், ᏞJ❍ᏬᏞJᎶU எண்ணங்களை உடையவருமான (பொது) மகளிர்மீதுள்ள பற்றை (நான்) விடும் நாள் எந்தநாள் என்று சொல்லியருளுக. (வள்ளிமலை) தந்த குறவர் மகளாம் நாயகி, திணைப்புனத்தில் விருப்பங்கொண்ட நாயகி - (ஆகிய) வள்ளிநாயகியின் திரண்ட கொங்கையை அணைந்த நாயகனே! சிவலோகனே! கொலைத்தொ ழிலே புரியும் அசுரர் குலங்கள் மாண்டழியவே கூரிய வேலை மகிழ்ந்து ஏந்தும் நாயகன்ே! குருபரனே! பழநியில் என்றும் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே! (மாதர்கள் கசனையை விடுவதும் எந்தநாள் அது பகர்வாயே) 164 விளங்கும் பழத்தின் சுவைக்கும் மேம்பட்ட மொழியும், இரவில் துங்கும் இரு கண்களென்னும் நஞ்சும், முகத் (தாமரையின்) மேலே - இசை ஒலிக்கும் வண்டும், இள முலையாகிய அரும்பும், விளங்கும் கரும்பு (போன்ற தோளும்) (கொண்ட என் மகள்) (அல்லது கரும்பு அன்ன என் மகள்) (தலைமகன் மாட்டுக்கொண்ட) மோகத்தால் - * நிலவின் குளிர்ச்சியும் சூடாக எரிக்க, உடல் வெந்து ಸ್ಥ போம்படி வேதனைப்பட்டும், நெகிழ்ச்சியுறும் உயிர் நொந்தும்-காமத்தை ஊட்டும் மன்மதனால் - (தனது) நிலை அழிந்துபோகும் நெஞ்சில் தலைமகன் (ந்ாயகன்) வந்து குடிபுகுந்த அந்த நின்னவு இன்றையே) கொண்டு இறந்துப்டுதல் நீதியா? (நாயகனாகிய நீ வந்து உன்னையே நினைந்து நையும் இவளுக்கு அருள்புரிய வேண்டும்- என்றபடி).