பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 533 ஒலிக்கின்ற (பம்பைகள்) பறைகள் டங்கு டாடிக என்னும் பேரொலியை முற்றினவகையில் எழுப்ப, அண்டங்களில், (ஐந்து பேரிகை) - துந்துமி (தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் , கஞ்சக்கருவி, மிடற்றுக் கருவி) என்னும் ஐவகை வாத்தியங்களும் டகுட டண்டட தொந்த தோதக என ஒலிக்கத் தாளம் மிக்கு க்க, (விஞ்சையர்) பதினெண்கணங்களுள் ஒருவராகிய வித்தியாதரர், தும்புரு நாரதர் என்பவர்களுட்ன் இன்பகரமான முறையில், சிந்து (இசைப்பாக்கள் ஒன்பது வகையுள் ஒன்று) என்னும் பா வகையைப்பாட, தேவர் துந்துமி (தேவபேரிகை), சங்கம், (தாரைகள்) நீண்ட ஊதுங் குழல்கள் (இவைகளின் ஒலி, ஊடு பொங்க இடையே மேலெழுந்தொலிக்க ரத்தப் பெருக்கின் வட்டம் எங்குமாய் விளக்கம் தரும்படிக் (குமண்டி யெழுந்து) குதித்தெழுந்து (எதிர்த்து வந்த) சூரர்களை அவர்தம் பெரிய நரம்புகளுட்ன் எலும்பும் பெரிய முடிகளும் சிதறுண்டு விழக் கொண்ட கோபத்துடனே - எதிர்த்துப் போர்புரிந்த) பராக்ரமசாலியே! மழைபெய்து உயர்ந்த இப் பூமியில் உள்ளோர் வாழ்வுறும்படி, பாம்புருவர் பதஞ்சலியும், புலியுருவர் - வியாக்ரபாதரும் றவனது நடனத்தைத்) தரிசித்த ஊராகிய சிதம்பரத்தில் மகிழ்ந்திருக்கும் தம்பிரானே! (விந்து நாதமொ டென்று சேர்வேன்) 653. பொருந்திய கடல், மேகம் இவைகளுக்கு ஒத்து கருமை நிறம் கொண்டது கூந்தல்; சந்திரனுக்கு ஒப்பு முகம்; நெற்றியானது வில். பிறை இவைகளுக்கு ஒப்பு: மதிக்கத்தக்க கண் ஆனது (மச்சம்) மீன், (பொற்கண்ை) அழகிய அம்பு இஜவகளுக்கு ஒப்பு: இழக்கு முக்கானது (பொற் குமிழ் அழகிய குமிழம்பூவை ஒத்து நிற்கும்:கத்தரிக்கோலை ஒத்துள்ளதுக்ாது; குழுதமலர் போன்றது வாயிதழ்; அமுதம் போன்றது சொற்கள் வரிசையாய் அமைந்த முத்துப் போன்றது பல் கழுத்து கமுகமரத்தை நிகர்க்கும் என