பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 469 மத்தக யானை - கும்பத் தலத்தை உடைய யானையை உரித்தவராம் சிவபிரான் ப்ெற் குமாரனே! இலக்குமிக்கு மைத்துன முறையில் உள்ள பராக்ரம 醬 மருகனே! வற்றிட வாரிதி - வாரிதி வற்றிட - கடல் சுவறவும், நிரம்பின ஜெயத்துட்ன் விளங்கின சூரர்கள் பதைக்கும்படி (வற்புறு) - வற்பு உறு வலிமை உடைய வேலாயுதத்தைச் செலுத்தி அருளின இளையோனே! அழகிய குறப்பெண் வள்ளியை அடைந்து, சமயத்தில், தினைப்புனத்தில் அவளைச் சிக்கெனத் க் சேர்ந்த மணவாளனே! வெட்சி மலர் சூழும் பாதத்தினனே அல்லது பதத்தின - திருவடியிற் சார்கின்ற உண்மைத் தவசிகள் வாழ்வு பெறத் தரு பெருமாளே) அழியாத ன்பவாழ்வைப் பெறுமாறு உதவுகின்ற பெருமாளே சித்த மூர்த்தியே விசாகப் பெருமாள்ே! தி: தேவர்களின் பெருமாளே! (தத்துவ ஞானம் எனக்கருள் புரிவாயே) 1191. வாசனை வீசி உலவும் மை பரந்த நீண்ட கூந்தலின் மீதும், (முளரிவாய்) தாமரை யன்ன வாயின்மீதும்,அசைகின்ற விரிந்த வேல் அனைய கண்களின் மீதும் முடுகுவோர்) விரைந்து செல்லும் உள்ளத்தினர்களின் (மனத்தைக்) (குலை) குலைப்பதற்கு வித்தான. அடிப்படைக் காரணமாக விளங்கும் (கோடெனும்) மலைபோன்ற கொங்கையாலே (முறைமை சேர்கெட) முறைமை சேர்தல் கெட ஒழுக்கம் கூடுதல் சிதறுண்டு கெட - க்கம் தவற (மைத்து ஆர்வு) தறுத்து, (நீர்) நிறைவுற்றுள்ள பெரிய கடலிற் பயணம் வின்ரந்து செல்பவர்போல - எய்த்து ஓடி - இளைப்புடனே ஒடி - வாழ்நாளைச் செலுத்தி (ஆகமும் மொழியும்) உடலும் பேச்சும் ம்ாறுதல் உறும்படி, பித்து ஏறினார் என்று சொல்லும்ப்டியான (முயல்வு) முயற்சிகளைச்ெய்கைக்ளை மேற்கொண்டு (அந்த உலக நெறியிலே ) தோன்றிப் பாவு கான் அடைந்தனள், உபேந்திரன். மூரிவில் வேடர் பால் உதித்தான்" - ஞான - உபதேச 1880, 1881, இனி - இந்திரன் பிறந்த பின்பு அவனுக்குத் தம்பியாய் உபேந்திரன் (திருமாலின் அம்சம்) தோன்றினன். ஆகவே இலக்குமியின் மைத்துனன் இந்திரன் எனவும் கொள்ளலாம். 'யான் முதல் தோன்றினன் எனது பின்னவன் கான் முளை யாகிய காம" கந்தபுரா - குமாரபுரி 44 (யான் - இந்திரன், பின்னவன் - திருமால்)