பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

•ыһуыr whiлып пі. 7| செந்தமிழ்நூல் விரித்தோனை செந்தமிழ்க் கடவுளாய் அகத்தியருக்குத் தமிழ் உபதேசித்தவர். அகத்தியர் மூலமாய்ச் செந்தமிழைப் பரவ வைத்தவர். அகப்பொருள் இலக்கண உண்மையை உரைத்தவர் - திருப்புகழ்ப் பாடல் 919, பக்கம் 676 பாடல் 350 பக்கம் 378 கீழ்க்குறிப்புக்களைப் பார்க்க, செந்தமிழ்த் தேவாரப் பதிகங்களைப் ப்ர்டி விரித்தவன் எனலுமாம்."நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன்"- சுந்தரர் 7.628 நல்ல செந்தமிழ்வல் லவன் ஞான சம்பந்தன்" - சம்பந்தன் 282.11 ஞானசம்பந்தன் உரைசெய்சங்கமலிசெந்தமிழ்கள். சம்பந்தர்37411 கார் மயில் கார் மேகத்தைக் கண்டு மகிழும் மயில் எனலுமாம் 'கார்பெற்ற தோகையோ நளவெண்பா. கடம்பு - மணமறாத கடம்பு பூத வேதாள வகுப்பு சாவுந்துணை சாந்துணை-இடைத் குறை துணை (கால அளவு, சாந்துணை, சாம்போதும் எனப் பிரித்துப்பொருள் காண்க, சாந்துணைப்போதும் மறவாதிருக்க வேண்டி " காலன் என தாவி தன்ையே குறுகி வருபோது. ஆதிமுருகா எனவும். நினைவு தருவாயே" என்றார் திருப்புகழில் (1242) 73. தன் ஆனந்தம் கூறினது போக்கும் வரவு மிரவும் பகலும் புறம்புமுள்ளும் . வாக்கும் வடிவு முடிவுமில் லாதொன்று வந்துவந்து தாக்கு மநோலயந் தானே தருமெனைத் தன்வசத்தே ஆக்கு மறுமுக வாசொல் லொணாதிந்த ஆநந்தமே. (அந்) அறுமுகவா போக்கும்...... ஆக்கும்; இந்த ஆனந்தம் சொல்லொணாது. (பொ - உ) ஆறுமுகப் பெருமாளே! (போக்கும் வரவும்) அழிதல் தோன்றுதல், (இரவும் பகலும்) - இரவு பகல், (புறம்பும் உள்ளும்) வெளி உள், வாக்கு வடிவு, முடிவு - என்பன இல்லாததான (ஒன்று) ஒருபொருள் வந்து வந்து-இருந்திருந்து வந்து (அலைபோல)த் தாக்கும் என்னை மோதுகின்றது; யான் எனது என்னும் நிலையை இழக்கச் செய்து என்னையும் தன் வசமாக்கிக் கொள்ளுகின்றது. இந்த ஆனந்த நிலை இத்தன்மைத்து என்று எடுத்து உரைக்க முடியாது. (சு-உ) பிறத்தல் இறத்தல், இரவு பகல் முதலானவற்றைக் கடந்த ஒரு பொருள் என்னைத் தன் வசப்படுத்தி மனோலயத்தைத் தந்துள்ளது; அதனால் வரும் பேரானந்தம் சொல்லும் தகைமையதன்று. (கு உ) போக்கு வரவு போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல்'- திருவாசகம் - திருப்பள்ளி-5 போக்கும் வரவும் புணர்வு மிலாப் புண்ணியனே - திருவாசகம்-சிவ புராணம்.