பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. கந்தரலங்காரம் 81 | - பாடல் 103 பயகரனே என்றிருந்தால் சூரனால் ஏற்பட்ட பயத்தை ஒழித்தவனே,எனப்பொருள்படும். பயகரமாலை என்னும் பெயரைப் பயங்கரமாலை எனத் திருத்திவிட்டதாக டாக்ட்ர் சுவாமிநாதையர் குறித்துள்ளார். அந்த மாலையில் பரதேசி பயகரனே. என்பதற்கு யாதொரு துணையுமில்லாதவருடைய அச்சத்தைக் கெடுப்பவர் எனப் பொருள் விளக்கியுள்ளார். I. 83. முருகன் திறல் தேங்கிய அண்டத் திமையோர் சிறைவிடச் சிற்றடிக்கே பூங்கழல் கட்டும் பெருமாள் கலாபப் புரவியிசை தாங்கி நடப்ப முறிந்தது சூரன் தளந்தணிவேல் வாங்கி யனுப்பிடக் குன்றங்க் ளெட்டும் வழிவிட்டவே. (பொ. உ) (தேங்கிய) மனங் கலங்கி ಶ್ದಿ (அண்டத்து (தேவலோகத்து (இமையோர்) தேவர்களின் (சிறைவிட) சிறையை ஒழிப்பதற்கே தனது (சிற்றடிக்கே சிறிய திருவடிகளிலே (பூங்கழல் அழகிய வீரக் கழல்களைக் கட்டின (பெருமாள்) முருகவேள் தமது (கில்ாபப் புரவி மிசை தோகை பெற்ற (குதிரையாம்) மயில்மீது ஏறி நடத்த (சூரன் தளம் முறிந்தது) சூரனுடைய சேனைகள் முறிபட்டு அழிந்தன (அவர்) தமது #.ಸಿ ப்பற்ற வேலாயுதத்தை (வாங்கி அனுப்பிட) எடுத்துப் பிரயோகிக்கக் (குன்றங்கள் எட்டும். அஷ்டகிரிகளும் வழிவிட்டவே-வழிவிட்டுவிலகின. - (சு உ) முருகவேள் தேவர்களின் சிறையை ஒழிக்க மயில்மீது ஏறி நடத்தினவுடன் சூரனுடைய சேனைகள் தோற்று அழிந்தன; அவர் வேலைச் செವಾಘಿ அஷ்டகிரிகளும் வழிவிட்டுவிலகின. (கு உ) தேங்குதல்-மனம் தலங்குதல் (பிங்கலம்), வேல்வாங்கவே. சிகர நெடுங்கிரி குகைகள் திறந்து திகந்தமும் லோகாந்தமும் நீர் தேங்கின"-வேல்வாங்கு வகுப்பு கழல் - பதமலர்மிசை கழல்கட்டாப் பாலக' என்றார் திருப் கழில் (152), இங்கு கழல் கட்டும் பெருமாள் என்றார். இதன் விவரம் ಘಿ 1152. பக்கம்356 கீழ்க்குறிப்பிற்காண்க 84. அடைக்கலம் புகுதல் மைவருங் கண்டத்தர் மைந்தகந் தாவென்று வாழ்த்து மிந்தக் 1கைவருந் தொண்டன்றி மற்றறி யேன்கற்ற கல்வியும் போய்ப் 2பைவருங் கேளும் பேதியுங் கதறப் பழகிநிற்கும் ஐவருங் கைவிட்டு மெய்விடும் போதுன் ணடைக்கலமே.