பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை (பொ உ) மை வரும் கருநிறம் விளங்கும் (கண்டத்தர்) திருக் கழுத்தை உடைய சிவனது மைந்த்ன்ே கந்தனே என்று வாழ்த்துகின்ற இந்தக் கை வரும்) ஒழுக்கமுறை அமைந்த (தொண்டன்றி) வழிபாடு தவிர - வேறு பணி உய்யும் வழி ஒன்றும் அறியேன், நான் (கற்ற கல்வியும் போய்) படித்த படிப்பெல்லாம் மறந்துபோய்ப் (பைவரும்) துக்கிக்கும் (கேளும் சுற்றத்தினரும், (பதியும்) ஊராரும் கதறி அழ (என்னுடன்) பழகி நின்ற (ஐவரும்) (மெய், வாய், கண், மூத்கு செவி எனப்படும் ஐம் பொறிகளும் (கைவிட்டு) தத்தம் தொழில்களைச் செய்யாது நழுவிப்போய், மெய் விடும்போது (இந்த உடலை நான் விடும்போது உன் (திருவடிகளே) எனக்கு அடைக்கலமாம். (சு உ) சிவகுமர கந்த என வாழ்த்தும் தொண்டுதான் எனக்குத் தெரியும்; என் உயிர் போம்போது அடியேன் உன் அடைக்கலம் (கு உ) கைவருந் தொண்டு = பழகி வந்துள்ள தொண்டு; ನ್ತತಿನೆಸ್ಡಟ್ಝಿಟ್ಠನ್ತಿಲ್ವನ್ದಿಶ್ಟ' கலித்தொகை 118 பதி = ஊரார். "உறவின்முறை கதறியழ ஊராரும் ஆசையற"- திருப்புகழ் 1143 'பழகிநிற்கும் ஐவர் ஐம்புலன்கள். ஜவர்க் கொருசெய் விளைந்து கிடந்தது ஐவரும் அச்செய்யைக் காத்து வருவர்கள் ஐவர்க்கு நாயகன் ஒலை வருதலால் ஐவரும் அச்செய்யைக் காவல்விட் டாரே-திருமந்திரம் 188. மணிவாசகனார் அருளியுள்ள அடைக்கலப்பத்துப் போல அருமை வாய்ந்த பாடல் இது பாராயணமாய் முருகனிடம் சதா முறையிடுவதற்கும் உரிய பாடல் இது, உறவினர் . நட்பினர் உயிர் விடும்போது அவர் காதிலே அடைக்கலப்பத்துப் போல ஒதவேண்டிய பாடல் இது. என்பெற்ற தாயரும் என்னைப் பிணமென் றிகழ்ந்துவிட்டார் பொன்பெற்ற மாதரும் போவென்று சொல்லிப் புலம்பிவிட்டார் கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடமுடைத்தார் உன்பற் றொழிய ஒருபற்று மில்லை உடையவனே s - பட்டினத்தார். அன்னை அழுது பினமென் றெனைவிட் டகன்றுவிட்டாள் பொன்னை அணைய மனையாள் புலம்பிப் புறம்புநின்றாள் என்னை எமர்கொண்டு காட்டகத் திட்டங் கெரியிலிட்டார் உன்னை ஒழிய ஒருதுணை உண்டோ உடையவனே.