பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரம் 87 ஒப்பற்ற வேலாயுதத்தை எடுத்துப் (பொங்குಸ್ಥಿ? அலைகள் பொங்கி மேலெழும் கடல் கதறவும், (பொன்னஞ் சிலம்பு) பொன் மயமான கிரவுஞ்சம் (புலம்ப) அழுது ஒலி செயவும், (வரும்) போர்க்கு எழுந்த (எங்கோன்) எமது ாகிய முருகவேள் (இங்ங்ணம் என்ன்ையும் பிரமன் தன் கு ப்பேட்டிற் சேர்த்ததை ہو۔ ந்தால் இனி அந்த (நான்முகனுக்கு பிரமனுக்கு (இருவிலங்கே முருகவேளால் இரண்டாம் முறையும் விலங்கு இடப்படும். (அல்லது நான்முகனுக்கு அவர் இப்போது இரட்டை விலங்கு கால் விலங்குடன் - என்னைச் சேர்த்துஎழுதின் அந்தக் கைக்குக் கைவிலங்கும் மாட்டிவிடுவார்). (சு உ) என்னைப் பிரமன் தனது குறிப்பேட்டில் எழுதி வைத்த விஷயம் எங்கள் முருகவேள் அறிந்தால் அவர் அவனுக்கு இரு விலங்கு மாட்டிவிடுவார். (கு - உ) 1பங்கேருகன் = பிரமன், 2.பட்டோலை = குறிப்பெழுதுமோலை. "வித்தார கவித்திறத்தினர் பட்டோலை" - திருப்புகழ் -981 ஒதம் =கடல்:"பொன்னஞ் சிலம்பு -கிரவுஞ்சம் ன்பு இட்ட விலங்கு காலில் என்னைப் பட்டோலையில் எழுதினதை முருகவேள் அறியின், அவர் இடும் விலங்கு பிரமனது கையில் ஆக இரண்டு விலங்கு - முன்பு ஒன்று - இப்ப்ோது ஒன்று; இருவிலங்கு-பெரிய விலங்கு - எனவும் பொருள் தரும். 90. தரிசனப் பாடல் மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற் சேலார் வயற்பொழிற் செங்கோ டனைச்சென்று கண்டுதொழ நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நோன்முகனே (அந்) மாலோன் மருகனை.......தொழ, அந்த நான்முகன் நாலாயிரங்கண் படைத்திலனே. (பொ. உ) திருமாலின் மருமகனைச் சபையில் நிருத்தம் செய்யும் சிவனது புதல்வனை தேவர்களுக்கு மேற்பட்ட தேவனை - மெய்ஞ்ஞான சொரூபராம் தெய்வத்தை . (மேதினியில்) இப் பூமி லே (சேல் ஆர் வயற் பொழில்) சேல்மீன்கள் நிறைந்த வயலும் சூழும் திருச்செங்கோட்டு (வேலனை) நான்போய்த் தரிசித்துத் தொழுவதற்கு அந்த (நான்முகன்) பிரமதேவன் எனக்கு நாலாயிரங் கண் படைத்தான் இல்லையே; (முருகவேளின் அழகைப் பார்க்க இரணடு கண்கள் போத்வே போதா, நாலாயிரங் கண் எனக்கு வேண்டும் என்றபடி)