பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்குத் தெரியாது? வள்ளுவர் கூறிய ஒப்புரவும் காந்தியடிகளின் அறக்கொடைக் கொள்கையும் உயர் மனிதர் ஒரு சிலரின் உள்ளங்களில் நிலையான மாற்றங்களைக் கொண்டு வரலாம்; ஆனால்சமுதாயத்தின் உள்ளத்தை மாற்றச் சட்டத்தால் தான் முடியும். நம்பி: வீணா! உன்னைப் பேச்சில் வெல்லமுடியாது பெண்கள் பேசப்பிறந்தவர்கள் அதனால்தான் பாரதி கண்ணம்மாவைப் 'பேசும் பொற் சித்திரமே! என்றான் வீணா: நம்பி! என்னை நீங்கள் வியப்பில் ஆழ்த்துகிறீர்கள்! நம்பி: எப்படி? வீணா: மருத்துவர்களுக்கும் முருகுசுந்தரம் கவிதைகள் i59