பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வன்பரணர் போன்றபெருங் கவிஞர், பாட்டில் வளர்த்துவந்த கருப்பொருள்நான்; உலகில் யாரும் என்பிறப்பை அறியாத காரணத்தால் இறைவனுக்கும் மூத்தவன்நான்; உயிரி னத்தின் துன்பத்தை அளக்கின்ற கோல்நான்; மக்கள் தோலுடம்பின் கட்டாயம் நான்தான்; ஏதும் தின்பதற்குக் கிடைக்காத போது, சாத்தான் செய்வதெல்லாம் செய்வதுதான் என்றன் வேலை. மாதவியின் அடிகள் கதங்கொள் யானைக் காவிரி நாட்டின் சதங்கைச் சரித்திரம்; சந்தனப் புறாக்கள். மேடை அலையில் மிதக்கும் தோணிகள். ஆடைக் கூடாரத் தழகிய மான்கள். பல்லியப் பாட்டுக்குப் பதவுரை கூறும் அல்லிகள்; இசைக்காற் றலைக்கும் தளிர்கள். கூத்தியல் வகுத்துக் கொண்ட பொதுவியல் வேத்தியல் களுக்கு விருத்தி யுரைகள். குதிக்கும் தந்தக் கனவுகள்; நெஞ்சில் பதிக்கும் பரதப் பாட்டு முத்திரைகள். இசைஉடன் பாடுகள்; ஏறி அரங்கில் அசையும் ஆயிரத் தெட்டு கழஞ்சுகள். கொடுக்கும் கொள்கைக் குத்தகைக் கோவலன் படுக்கைக் காப்பியப் பாயிர வரிகள். சந்தம் வேறு படுத்திக் காட்டும் செந்தொடை முரண்தொடைச் செய்யுள் அடிகள். அஞ்சுகற் பனைகளை அழகாய் வளர்த்த பஞ்சகாவியங்கள்; செம்பஞ்சு மேடைகள். மாசாத்து வான்மகன் மடிமீது மீட்டிய பேசாத யாழ்கள்; பின்னும் அன்னங்கள். முருகுசுந்தரம் கவிதைகள் 319