பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பந்தயத் தூரத்தில் கொஞ்சம் சலுகை கேட்பதில் என்ன தப்பு? நீங்கள் - எங்கள் மேனியில் இரக்கமின்றி இழுத்த சாதிச் சூட்டுத் தழும்புகளை, நாங்கள் இப்போது வரிக் கோடுகளாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் - எங்களுக்குப் பூட்டிய அடிமை விலங்குகளையே கேடயமாகச் செய்து கொண்டிருக்கிறோம். துரோகத் துரோணர்களே! இன்றைய ஏகலைவர்கள் கட்டை விரல்களைக் காணிக்கை யாக்கத் தயாராக இல்லை. பாரதப் படையில் அதிரதர் மகாரதர் பதவிக்கு அவர்களும் போட்டி போடுகிறார்கள். அதிகார வர்க்கத்தின் அயோத்தி ராமர்களே ! கோதண்டத்தைக் கீழே போடுங்கள். இன்றைய சம்புகர்கள் தலை கீழாகத் தொங்கித் தலையை இழக்க மாட்டார்கள். சொர்க்கத்தில் விகிதாச் சாரப்படி நுழைய முருகுசுந்தரம் கவிதைகள் 47