பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரித்தறியும் முயற்சி; வசனத்தையும் கவிதையையும் ஒன்று சேர்க்கும் முயற்சி; யாப்போசையைக் குறைத்து, பேச்சோசையைச் சேர்க்கும் முயற்சி. 6 'மஹாகவியும் தமிழ்க் கவிதையும்' என்னும் கட்டுரையில் சண்முகம் சிவலிங்கம் பாரதி பற்றித் தரும் ஒரு குறிப்பு முக்கியமானது. 'பாரதியைப் பொறுத்த வரையில், பரந்துபட்ட மக்களின் சமூக அரசியல் விழிப் புணர்ச்சிக்கும், போராட்டத்திற்கும் தமிழ்ச் செய்யுளையும் கவிதையையும் அழைத்ததே அவருடைய தன்மைப்பாடு' (மஹாகவியின் கோடைப. 60). என்பது சிவலிங்கம்தரும் குறிப்பு. இந்தத் தன்மைப்பாடு பாவேந்தரிடமும் இருந்தது; பாவேந்தருக்குப் பிறகு இந்தத் தன்மைப்பாடு தமிழ்க்கவிதை உலகில் தேய்ந்து இற்றுப்போகும் நிலைக்கு வந்திருப்பதுதான் கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் என்னைப் போன்றோர் நம்பிக்கை இழந்துவிடவில்லை. 1972-ஜன-பிப் 'தீபம்’ இதழில் கவிதைபற்றிய ஒரு விவாதத்தில் எனது நம்பிக்கையைப் பின்வருமாறு தெரிவித்திருந்தேன். 'எதிர்காலத் தமிழ்க் கவிதையில் மனிதநேயம், சர்வதேசியம், சோசலிசம், நடப்பியல், ஆகியன பின்னிப் பிணைந்திருக்க வேண்டும்.’’ என்னுடையதும், - என்போன்ற பலருடையதுமான எதிர்காலத் தமிழ்க் கவிதைபற்றிய நம்பிக்கைகள் பொய்யாகி விடவில்லை என்பதற்கான ஒளிக் கீற்றுக்கள் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் கவிஞர் முருகுசுந்தரம் அளித்துள்ள எரிநட்சத்திரம்'. 7 கா. பூரீ.யூரீ வழியே காண்டேகரைத் தரிசித்து மகிழ்ந்த தமிழ்வாசகர்களுக்கு எரிநட்சத்திரம்' என்ற பெயர் அவ்வளவு சுலபமாய் மறந்து விடக்கூடிய பெயரில்லை. காண்டேகரின் 'எரிநட்சத்திரம்' நாவலில் எரிநட்சத்திரமாய் வருபவள் உல்கா அந்த ‘உல்கா என்னும் எரிநட்சத்திரத்தின் பின்னணிவேறு; முருகுசுந்தரம் படைத்துள்ள வீணா என்னும் எரிநட்சத்திரத்தின் பின்னணி வேறு. அப்பாவும், மகள் உல்காவும் பேசிக்கொள்ளும் உரையாடல் நினைப்பதற்குரியது: 'இந்த நட்சத்திரம் எங்கே போகிறது?" 'அது பூமிக்கு வருகிறது' 'அது தனியாகவா வருகிறது? மீதி நட்சத்திரங்கள் ஏன் வருவதில்லை?" முருகுசுந்தரம் கவிதைகள் - ア5