பக்கம்:முல்லைக்கொடி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

சோழ நாட்டின் பெரும் பகுதி மருத நிலப் பகுதி யாகும். எனவே, ஆயர்குடிப் பெருமக்கள் அங்கே பண்டை நாளிற் சீருடன் வாழ்ந்திருத்தல் இயற்கையின் நியதிக்கும் ஏற்புடையதன்று. மேலும், ஏறு தழுவுதல் இன்றும் தென்பாண்டி நாட்டிலேயே நிலவிடக் காணுகின்றோம். ஆதலின், இவ்வாசிரியர் பாண்டிய நாட்டின்கண் வாழ்ந்தவர் என்றுதான்் நாம் கருத வேண்டியதாகின்றது.

பாண்டிய நாட்டவரான இவர், பல காலம் சோழ நாட்டிற் சென்று தங்கியவராதலின் சோழன் என்று குறிப்பிடப் பெற்றாரோ என்றும் கருதலாம். இதுவும் நம் யூகமாகவே தோன்றும்.

அல்லது, சோழ நாட்டினின்றும் பாண்டிய நாட்டின்பாற் போந்து, அங்கேயே தங்கி வாழ்ந்து, புலமைச் செங்கோல் ஒச்சி உயர்ந்த நிலையுடைய வராதலின், பாண்டி மண்டிலப் புலவருள் இவரைத் தனித்துக் குறித்தற் பொருட்டுச் சோழன் என வழங்கினர் என்றும் சிலர் கருதுகின்றனர்.

இந்நாளிலும், தென்பாண்டி மாவட்டங்களினின் றும் பிறவூர் சென்று தொழில் நடாத்தி வருபவரை, அவ்வப் பகுதிகளிற் கொழும்பு முருகையாப் பிள்ளை, பட்டினத்து அண்ணாமலைப் பிள்ளை, கருவூர் சோம நாதன் செட்டியார் என்றாற்போல அடைமொழியிட்டு வழங்குவதை நாம் காணலாம். இஃதேபோல் அற்றை நாளில் நம் புலவர் பெருமகனாரும் அழைக்கப் பட்டிருத்தல் கூடும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/15&oldid=707859" இலிருந்து மீள்விக்கப்பட்டது