பக்கம்:முல்லைக்கொடி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ. 159

“யார் இவன் என்னை விலக்குவான்? நீர் உளர் பூந்தா மரைப்போது தந்த விரவுத்தார்க் கல்லாப் பொதுவனை; நீ மாறு; நின்னொடு சொல்லல் ஒம்பு என்றார் எமர்;

எல்லா! கடாஅய கண்ணால் கலைஇய நோய்செய்யும் 5 நடாஅக் கரும்பு அகன்ற தோளாரைக் காணின், விடாஅல்; ஒம்பு; என்றார் எமர்;

கடாஅயார், நல்லாரைக் காணின் விலக்கி நயந்தவர் பல்இதழ் உண்கண்ணும் தோளும் புகழ்பாட நல்லது கற்பித்தார் மன்ற நூமர் பெரிதும் 10 வல்லர் எமர்கண் செயல்;

ஒஒ வழங்காப் பொழுது, நீ. கன்று மேய்ப்பாய் போல் வழங்கல் அறிவார் உரையாரேல், எம்மை இகழ்ந்தாரை அன்றோ எமர்? ஒக்கும்; அறிவல்யான்; எல்லா! விடு. 15

விடேன்யான்; என் நீ குறித்தது இருங்கூந்தல்! நின்னை என் முன்நின்று - சொல்லல் ஒம்பு என்றமை அன்றி, அவனைநீ புல்லல் ஒம்பு என்றது உடையரோ? மெல்ல - முயங்கு நின்முள்ளெயிறு உண்கும்; எவன் கொலோ 20

மாயப் பொதுவன் உரைத்த உரையெல்லாம் வாயாவதாயின், தலைப்பட்டாம்; பொய்யாயின், சாயல் இன்மார்பின் கமழ்தார் குழைத்தநின் ஆயிதழ் உண்கண் பசப்பத், தடமென் தோள் சாயினும், ஏனர் உடைத்து.” - 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/161&oldid=708005" இலிருந்து மீள்விக்கப்பட்டது