இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
42
வேய்உறழ் மென்தோள் துயில்பெறும், வெந்துப்பின் சோய் சினன் அஞ்சான் சார்பவன்; என்றாங்கு அறைவனர் நல்லாரை ஆயர் வாங்கெழில் நல்லாரும் மைந்தரும் மல்லல்.ஊர் ஆங்கண் அயர்வர் தழுஉ பாடுகம் வம்மின் பொதுவன் கொலையேற்றுக் கோடு குறி செய்த மார்பு. - இவ்வாறு, ஒவ்வொன்றாக எடுத்து எடுத்து எழுதப் புகின், முன்னுரையே தனி நூலாகிவிடும். ஆதலின், படிப்பவர் பார்த்துப் பயன் பெறுக பிறவெல்லாம் எனக் கூறி, முல்லைக் கலியின் நயத்தை நூலுள் கண்டு திளைக்கு மாறு அனைவரையும் விருப்புடன் விருந்தயர்க' என அழைத்து, இம்முன்னுரையை இத்துடன் நிறுத்துகின்றேன்.
க. சொக்கலிங்கன்