72 இ புலவர் கா. கோவிந்தன்
பல்லர், பெருமழைக்கண்ணர், மடம் சேர்ந்த சொல்லர்: சுடரும் கணங்குழைக் காதினர், நல்லவர் கொண்டார் மிடை, அவர்மிடை கொள,
மணிவரை மருங்கின் அருவிபோல அணிவரம்பறுத்த வெண்கால் காரியும்
மீன்பூத்து அவிர்வருல் அந்திவான் விசும்புபோல்
வான்பொறி பரந்த புள்ளி வெள்ளையும்; கொலைவன் சூடியகுழவித் திங்கள் போல் வளையுட மலிந்த கோடணி சேயும், பொருமுரண் முன்பின் புகலேறு பலபெய்து அரிமாவும், பரிமாவும், களிறும், காரமும் பெருமலை விடரகத்து ஒருங்குடன் குழிஇப் படுமழை ஆடும் வரையகம் போலும் கொடிநறை சூழ்ந்த தொழுஉ.
தொழுவினுள், புரிபு புரிபு புக்க பொதுவரைத் தெரிபு தெரிபு குத்தின ஏறு.
ஏற்றின் அரி பரிபு அறுப்பன சுற்றி எரிதிகழ் கணிச்சியோன் சூடிய பிறைக்கண் உருவமாலை போலக் குருதிக் கோட்டொடு குடர் வலந்தன.
கோட்டொடு சுற்றிக் குடர்வலந்த ஏற்றின்முன் ஆடிநின்று அக்குடர் வாங்குவான் பீடுகாண், செந்நூல்கழி ஒருவன் கைப்பற்ற, அந்நூலை முந்நூலாகக் கொள்வானும் போன்ம்.
10
15
20
25
30.