இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
4
பாடுகம் வம்மின் !
அவள் ஓர் இடைச்சி; புகழ் மிக்க குடியில் பிறந்தவள். அவள் பிறந்த ஆயர்குடி, அன்று நாடாண்டிருந்த பாண்டியப் பேரரசின் பழம் பெரும் புகழ் கெடாதவாறு பேணிப் பாதுகாத்த பெருமை யுடையது. தன் நாட்டின் பெரும்பகுதி, கடல் கோளால் மறைந்து போக, அவ்விழப்புக் கண்டு சிறிதும் கலங்காது, தன் அண்டை அரசுகளாகிய சேர சோழ நாடுகளுள் புகுந்து, வென்று, ஆங்குப் பறந்திருந்த விற்கொடியையும், புலிக் கொடியையும் அகற்றி விட்டுத் தன் கயற்கொடியை நாட்டி, இழந்த நாட்டிற்கு ஈடான நாட்டைப் பெற்று நாடாண்ட பாண்டியன் பெருஞ் செயலில், அவனுக்குப் பெருந் துணை புரிந்த பெருமை அவள் ஆயர் குடிக்கே உரித்து.
அத்தகைய பழம்பெரும் பெருமை வாய்ந்த குடியில் பிறந்த அவளை, ஓர் இளைஞன் காதலித்தான்்; அவளும்