பக்கம்:முல்லைக்கொடி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைக் கொடி இ 87

இரிபு எழுபு அதிர்பு அதிர்பு இகந்து உடன்பலர்நீங்க அரிபு அரிபு இறுபு இறுபு குடர்சோரக் குத்தித் தன் 40 கோடு அழியக் கொண்டானை ஆட்டித்திரிபு உழக்கும் வாடில் வெகுளி எழில் ஏறு கண்டை, இஃதுஒன்று வெருவரு தூமம் எடுப்ப வெகுண்டு திரிதரும் கொல்களிறும் போன்ம், தாள்எழு துணிபிணி இசைதவிர்பு இன்றித் தலைச்சென்று

45 தோள்வலி துணிபிணி துறந்து இறந்துஎய்தி மெய்சாய்ந்து கோள் வழுக்கித் தன்முன்னர் வீழ்ந்தான்்மேல் செல்லாது மீளும் புகர்ஏற்றுத் தோற்றம்காண், மண்டு அமருள், வாளகப் பட்டானை ஒவ்வான் எனப்பெயரும் மீளி மறவனும் போன்ம். 50 ஆங்க, செறுத்து அறுத்து உழக்கி ஏற்று எதிர்நிற்ப மறுத்து மறுத்து மைந்தர் சாரத் தடிகுறை இறுபுஇறுபு தாயின. கிடப்ப, இடிஉறழ் இசையின் இயம் எழுந்துஆர்ப்பப், பாடேற்றுக் கொள்பவர் பாய்ந்துமேல் ஊர்பவர், 55 கோடுஇடை நுழைபவர் கோள் சாற்று பவரொடு, புரிபு மேற்சென்ற நூற்றுவர் மடங்க வரிபுனை வல்வில் ஐவர் அட்ட பொருகளம் போலும் தொழுஉ.

தொழுவினுள்; கொண்ட ஏறெல்லாம் புலம்புகத் தண்டாச்சீர்

60 வாங்கெழில் நல்லாரும் மைந்தரும் மல்லல்ஊர் ஆங்கண் அயர்வர் தழுஉ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முல்லைக்கொடி.pdf/89&oldid=707933" இலிருந்து மீள்விக்கப்பட்டது