5
இன்று கொடுப்பது எவன்?
நில வளமும் நீர் வளமும் அவ்விரண்டின் துணை யால் பெறலாகும் நெல் வளமும் எந்நாட்டிற்கும் உரிய, எல்லா நாடுகளுக்கும் சிறப்பளிக்கும் அவற்றைப் பெறுவதில் தனக்குப் பெருமையில்லை எனக் கருதித், தன்னை ஆளும் அரசன் அண்டை நாடுகள் மீது சென்று அறவழியில் போரிட்டு வென்று கைப்பற்றிக் கொணர்ந்த திறை தந்த வளமும், ஒயாது ஒல்லிக்கும் கடல் திரை கொழிக்கும் முத்து வளமும் தனக்கே உரியவாகப் பெற்ற தனிச் சிறப்புடையது பாண்டி நாடு. அப்பாண்டி நாட்டு மண்ணில் பிறந்தவர் நாங்கள்; அது மட்டுமன்று, அப்பாண்டி நாட்டிற்கு அத்தகைய பெருமை அளிக்கும் அந்நாட்டு மன்னனின் பழம் பெரும் குடியில் வந்தவர் நாங்கள்; எனப் பெருமை பாராட்டும் பெருங்குடியில் வந்த ஆயர்கள், ஒருநாள் ஒன்றுகூடி, "ஊரில் ஏறு தழுவும் விழா இன்று நிகழும்!” எனப் பறையறையப் பணித்தனர்; பறையறைவோனும், தெய்வத்தை வணங்கித், தென்னவன்