பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை. என்பது குறுந்தொகை என்னும் பழைய தமிழ் நூலில் உள்ள ஒரு பாட்டு. தன் மகள் தன் காதற்கணவன் வீட்டில் எப்படி யிருக்கின்றாள் என்பதைக் கண்டறியும் பொருட்டுச் சென்ற செவிலித்தாய், அவ்விருவரும் மிக நேசமாய் இருப்பதைக் கண்டு, தன்னுள் மகிழ்ந்து சொல்லிய தாக இது பாடப்பட் டிருக்கின்றது. "என் மகள் வற்றக் காய்ச்சின கட்டித்தயி ரைப் பிசைந்த காந்தள் மலர்முகிழ்போற் சிவந்த மெல்லிய விரல்களால், இடுப்பிற் கட்டிய நன்கு கழுவி வெண்மையான உயர்ந்த ஆடை சமையல் செய்யும் விரைவினால் அவிழ்ந்து கழல் அதனைக் கைகழுவாமல் உடுத்துக்கொண்டு, குவளைப் பூப்போன்ற மைதீட்டிய தன் கண்களி லே தாளிப்புச் செய்யும் புகைபட்டு மணக்க அதனையும் பாராமல், தான் துடுப்பினால் துழாவி மிக அன்போடு சமைத்த தித்திப்பான புளிப்பாகி னைத் தன் கணவன் மிகவும் இன்சுவைத்தாயிருக்கின்ற தென்று சொல்லிக்கொண்டே உண்ணுதலைப்பார்த்து ஒளி மிகுந்த நெற்றியினையுடைய என் மகளின் முகம் உள்ளுக் குள்ளே நுட்பமாய் மசிழ்ச்சி அடைந்தது. என்பது தான் இப்பாட்டின் பொருள். பாருங்கள்! இச்செய்யுளின் இயற்கை யழகும், மனோபாவக இயல்பும் எவ்வளவு அருமையாக இருக்கின்றன ! காதற் கணவனும் மனைவியும் கழுமி இருந்து இல்லறம் நிகழ்த்தும் ஒழுக்கம் முல்லை எனப்படுமாகலின், அவ்வொழுக்கம் நடைபெறுகின்ற முல்லை நிலத்திற்கு ஏற்ப 'முளிதயிர்பிசைந்த' என்றார்; தயிர் பால் முதலியன ஆனிரை மிக்க முல்லை நிலத்திற்கே உரியன. தன் கணவன் மே லுள்ள காதன் மிகுதியினால் ஏவலரும் பிறருஞ் சமையல் செய்வதற்கு உடன்படாது தானே தன் மெல்லிய சிவந்த விரல்களால் தயிரைப் பிசைதலும், கணவன் பசித்திருப் பானே என்னும் நினைவால் விரைந்து சமையல் செய்யும் போது இடுப்பில் கட்டிய உயர்ந்த ஆடை கழலவும் பிசைந்த கையினைக் கழுவிவிட்டு உடுப்பதற்குங் காலந்தாழ்க்கும் என்று அக்கையுடனே அவ்வுயர்ந்த ஆடையினைக் கட்டிக்கொள்ளுத