பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• பாட்டின் வரலாறு. இனித் திருமுருகாற்றுப்படை முதலான பாட்டுக்கள் ஒன் பதும் உள்ளோன் ஒரு தலைவனையே குறிப்பிட்டுப் பாடவந்த மையால், இம்முல்லைப்பாட்டிற்குத் தலைவன் பெயர் எழுதப் படவில்லையாயினும், இதற்கும் உள்ளோன் ஒரு தலைவன் உண்டென்பது துணியப்படும். இம்முல்லைப்பாட்டை அடுத் திருக்கின்ற மதுரைக்காஞ்சியும் நெடுநல்வாடையும் தலையா லங்கானத்துச் செருவென்ற பாண்டி பன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக்கொண்டு விளங்கலால், அவற்றை அடுத்திருக்கின்ற இதுவும் அவனையே பாட்டுடைத்தலைவனா கக்கொண்டு செய்யப்பட்டிருக்க வேண்டுமென்பது ஊடகிக்கப் படும். பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானம் என் னும் இடத்தில் தன்னைப்பகைத்து எதிர்ந்த சேரன் சோழன் திதியன் எழினி எருமையூரன் இருங்கோவேண்மான் பொரு நன் என்னும் அரசர் எழுவரோடும் போர் புரிதற் பொருட்டுச் சென்றபோது, அவன் மனைவி கொழுநன் பிரிவின் துயாத் தை ஆற்றிக்கொண்டிருந்த அருமையும், அவன் அவ்வரசரை யெல்லாம் வென்று தான் சொன்னவண்ணங் கார்ப்புருவத் துவக்கத்தில் மீண்டுவந்தமையும் கண்டு நப்பூதனார் இதனைப்பா டினாரென்பது புலப்படும். இவ்வாறே நெடுநல்வாடையினும் ஆசிரியர் நக்கீரனார், நெடுஞ்செழியன் மனைவி அவனைப் பிரிந்து வருந்திய துன்பத்தினை விரித்துச், செம்முகச் செவிலியர் கைம்மிகக்குழீஇக் குறியவும் நெடியவும் உரைபல பயிற்றி இன்னே வருகுவர் இன் துணையோரென முகத்தவை மொழியவும் ஒல்லாள் மிகக்கலுழ்ந்து உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயிரா மாயிதழ் ஏந்திய மலிந்து வீழ் அரிப்பனி