இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நப்பூதனார்
இயற்றிய
முல்லைப் பாட்டு,
- நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு
- வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
- நீர் செல் நிமிர்ந்த மாஅல் போலப்
- பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு
(௫)கோடு கொண் டெழுந்த கொடுஞ்செல வெழிலி
- பெரும் பெயல் பொழிந்த சிறுபுன் மாலை
- யருங்கடி மூதூர் மருங்கிற் போகி
- யாழிசை யினவண் டார்ப்ப நெல்லொடு
- நாழி கொண்ட நறுவீ முல்லை
(௰)யரும்பவி ழலரி தூஉய்க்கை தொழுது
- பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச்
- சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றி
- ஏறுதுய ரலமர னோக்கி யாய்மக
- ணடுங்கு சுவ லசைத்த கையள் கைய
(௰௫)கொடுங்கோற் கோவலர் பின்னின் றுய்த்தா
- வின்னே வருகுவர் தாய ரென்போ
- ணன்னர் நன் மொழி கேட்டன மதனா
- னல்ல நல்லோர் வாய்ப்புட் டெவ்வர்
- முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
(௨௰) வருத றலைவர் வாய்வது நீநின்
- பருவா லெவ்வங் களை மா யோ யெனக்
- காட்டவுங் காட்டவுங் காணாள் கலுழ்சிறந்து
- பூப்போ லுண்கண் புலம்புமுத் துறைப்பக்
- கான்யாறு தழீஇய வகனெடும் புறவிற்
(௨௫) சேணாறு பிடவமொடு பைம்புத பெருக்கி