பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு. நம் வேட்டுப் புழை யருப்ப மாட்டிக் காட்ட விடுமுட் புரிசை யேமுற வளை இப் படு நீர்ப் புணரியிற் பரந்த பாடி யுவலைக் கூரை யொழுகிய தெருவிற் (நம்) கவலை முற்றங் காவனின்ற தேம்படு கவுள சிறுகண் யானை யோங்கு நிலைக் கரும்பொடு கதிர்மிடைந் தியாத்த வயல்விளை யின் குள குண்ணாது நுதறுடைத் தயினுனை மருப்பிற்றங் கையிடைக் கொண்டெனக் கவைமுட் கருவியின் வடமொழி பயிற்றிக் கல்லா விளைஞர் கவளக் கைப்பக் கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான் முக்கோ லசைநிலை கடுப்ப நற்போ ரோடா வல்விற் றூணி நாற்றிக் (சாய்) கூடங் குத்திக் கயிறுவாங் கிருக்கைப் பூந்தலைக் குந்தங் குத்திக் கிடுகுநிரைத்து வாங்குவில் லரண மரண மாக வேறுபல் பெரும்படை நாப்பண் வேறோர் நெடுங்காழ்க் கண்டங் கோலி யகநேர்பு (ச) குறுந்தொடி முன்கைக் கூந்தலஞ் சிறுபுறத் திரவுபகற் செய்யுந் திண்பிடி யொள்வாள் விரவுவரிக் கச்சிற் பூண்ட மங்கையர் நெய்யுமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇக் கையமை விளக்க நந்துதொறு மாட்ட (இய) நெடுநா வெண்மணி நிழத்திய நடுநா ள திரல் பூத்த வாடு கொடிப் படாஅர் சிதர்வா லசைவளிக் கசைவந் தாங்குத் துகின்முடித்துப் போர்த்த தூங்க லோங்குநடைப் பெருமூ தாள ரேமஞ் சூழப் (ரு) பொழுதளந் தறியும் பொய்யா மாக்க டொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி யெறிநீர் வையகம் வெலீஇய செல்வோய்நின்