பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பாதபாடு. வந்த நற்சொல்லானும் நின் தலைவன் தான் எடுத்துச்சென்ற போர்வினையைக் கடுகமுடித்து இப்போதே வந்துவிடுவான் என்று துணிகின்றோம்; ஆதலால் மாயோய்! நீ வருந்தாதே என்று அம்முது பெண்டிர் பலகாலும் வற்புறுத்தி ஆற்றுவிக் கவும் ஆற்றாமல் தன் கண்களில் நீர் முத்துப் போல் இடைய றுந்து துளிப்பத் தலைமகள் மிகவும் வருந்துகின்றாள். உச - முதல் எ.அ-வரி வரையில். பாட்டின் பொருட்காட்சி தலைமகன் பாசறையிலிருக்கும் இருப்புக்கு மாறுகின்றது ; உச -முதல் உஅ.வரையில் பாசறையின் அமைப்பு. இனி வேனிற்காலத் துவக்கத்திற் பசைமேற் சென்ற தலைவன், பகைவர் தம் நகரத்திற்குக் காவலாக அமைத்த அகன்ற பெரிய காட்டிலுள்ள பிடவஞ்செடிகளை யும் பசிய தூ றுகளையும் வெட்டி, வேட்டுவர் அரண்களையும் அழித்து, முட்களை மதிலாக வளைத்துக் கடலைப்போல் அகலமான பாடி வீடு அமைத்தமை சொல்லப்படுகின்றது. உரு -முதல் எக-வரையில். பாடி வீட்டினுள் அமைதிகளும், தலைமகனு டைய உடம்புநிலை உள்ள நிலைகளும் மிக நுணுக்கமாக எடுத்துச் சொல்லப்படுகின்றன, இனி இங்ஙனம் அமைக்கப்பட்ட பாடி வீட்டினுள்ளே தழைகள் மேல்வேய்ந்த கூரைகள் ஒழுங்காக இருக்குந் தெரு வில் நாற்சந்தி கூடும் முற்றத்திலே காவலாக நின்ற யானை கரும்போடு நெருங்கக் கட்டிய நெற்கதிரினையும் அதிமது ரத் தழையிலையும் உண்ணாமல் அவற்றினால் நெற்றியைத் துடைத்துக்கொண்டும், கொம்பிலே தொங்கவிட்ட தும்பிக் கையிற் கொண்டும் நிற்றலால் அவ் யானைப்பாகர் அங்குசத் தாற் குத்தியும் வடசொற்களால் அதட்டியும் கவளம் ஊட்டு கின்றார்கள். இனி, அப்பாடி வீட்டினுட் பல்வகைப் படைகளும் இருப்பதற்கு அமைக்கப்பட்ட அரண்களையும் அவ்வாண்க