பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை. இட்ட நாழிகை வட்டிலைப் பார்த்துவந்து அரசன் எதிரிலே இடையாமம் ஆயிற்று என்றாலும், யவனர்களாற் புலிச்சங்கிலி விட்டு மிக அழகிதாக நியமிக்கப்பட்ட பள்ளியறையுள் அவர் கள் விளக்குக்காட்டச் சென்று அரசன் பள்ளிகொண்டிருத்த லும், அப்போது ஊமை மிலேச்சர் பள்ளியறையைச் சுற்றிக் காவலாக இருத்தலும், படுக்கைமேல் உள்ள அரசன் மறு நாட் போரை விரும்பும் உள்ளத்தோடு தூக்கம் பெறானாய், முன்னாட் போரிற் புண்பட்ட யானை குதிரைகளையும் செஞ் சோற்றுக்கடன் கழித்து இறந்தொழிந்த அரியபோர்வீரரையும் நினைந்து வருந்தி, ஒரு கையை மெத்தையின் மேலும் மற்று ஒரு கையைத் தலையின் கீழும் வைத்துப் படுத்திருத்தலும், தலைமகள் ஏழடுக்குமாளிகையில் தன் கணவன் வருகையை நினைந்து பிரிவின் துன்பத்தை ஆற்றிக்கொண்டு பதுமை யின் கையிலுள்ள விளக்கானது எரிய மாளிகையின் கூடல் வாயிலிலே வந்து விழும் நீர்த்திரள் ஒலிப்ப மயில்போற் படுத் திருத்தலும், அப்போது தலைவன் தன் றேரினை விரைவாகச் செலுத்திக்கொண்டு காட்டிலே வருதலும் நாம் நேரே காண் கின்றதுபோலவும், படம் எழுதி நங்கண் ணெ திரே காட்டி னாற்போலவும் மிக்க அழகுடன் சொல்லப்படுதல் காண்க. இனி இவ்வாசிரியர் தாம் புனைந்துரைக்கும் பொருள்க ளின் உள்ளே நுழைந்து அவற்றை விரிவாகப்புனைந்துரைக் கின்றாரென்பதும் ஈண்டு அறியற் பாற்று; இவ்வியற்கை பத் துப் பாட்டுக்கள் இயற்றிய புலவர் எல்லாரிடத்தும் பொது வாகக் காணப்படுவதொன்றாம். ஆயினும், இவரை யொழிந்த ஏனைப்புலவரெல்லாரும் நம் மனோபாவக வுணர்ச்சி சலிப்ப டையா வண்ணம் விரித்துப் புனைந்து சொல்லுதற்கு இசைந்த நன்பொருள்களையே விரித்துரைக்கின்றார் கள்; மற்று இவரோ புனைந்துரை விரிப்பதாற் சுவையுண்டாகாத ஒரோவொன்றனை யுஞ் சிறிது அகலவிரித்துக் கூறுகின்றார்; பாடிவீடு அமைக் கப்பட்ட தன்மையினை இவர் இன்னுஞ் சிறிது சுருக்கிக் கூறி யிருந்தால் இப்பாட்டு இன்னும் பொருட்சுவை முதிர்ந்து