பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சம் பாவும் பாட்டின் நடையும். விளங்கும். திருமுருகாற்றுப்படை முதலான எனைச்சில்பாட்டுக் களுக்கு இம்முல்லைப்பாட்டு இவ்வாற்றால் ஒருசிறிது தாழ்ந்தது போலுமென அவை தம்மை ஒப்புநோக்கிக் கற்பார்க்கு ஒரு காற்றோன்றினுந் தோன்றும். என்றாலும் இப்பாட்டின் கட் கண்ட பொருட்கோவை நினைக்குந்தோறும் இன்பம் பயக் கும் விழுப்பம் வாய்ந்து மிளிர்கின்றது. பாவும் பாட்டின் நடையும். இனி இச்செய்யுள் நேரிசை அகவற்பாவாற் செய்யப் பட்ட தொன்றாம். இதில் ஒவ்வோர் அடியும் நான்கு சீர்க ளான் வகுக்கப்படும்; ஒவ்வொரு சீரும் இரண்டசைக்குக் குறையாமலும் மூன்றசைக்கு மேற்படாமலும் வரும்; புல வன் தான் கருதிய அரும்பொருள்களையெல்லாம் வருத்த மின்றி இலேசாக வெளியிடுவதற்கு இவ்வகவற்பாவினும் இசை வானது பிறிதில்லை. எதுகை யின்பமும் மோனையின்பமும் தோன்ற இயைந்து நிற்குஞ் சொற்கள் மற்றைப்பாஷை களிற் போலாது தமிழில் மிகப்பெருகியிருந்தாலும், அவ் வெதுகைநயம் மோனை நயங்களையே பெரிதும் நோக்காது பழைய தமிழ்ப்புலவர்களெல்லாரும் பொருள் சென்ற வழியே சொற்கள் நிரம்பச் செய்யுட்கள் பலவும் இயற்றுவாராயினர். பொருளொழுங்குமுதிரத் தங் கருத்துக்களை இணக்கிவைத் துச்செல்லும்போது ஆங்காங்கு இடர்ப்பாடின்றி எளிதாகத் தோன்றும் எதுகை மோனைகளையே அமைப்பார்; எதுகை மோனைகளுக்கு ஏற்பப் பொருள் பொருத்துவாரல்லர். பிற்கா லத்தில் அகவற்பாப்பாடின புலவர் பெரும்பாலும் ஒவ்வோரடி யிலும் முதற்சீரும் மூன்றாஞ்சீரும் எதுகைபொருந்தத் தொ டுத்தார்கள்; சிலர் இவ்விரண்டு அடிகள் முதற்சீர் எதுகை இணையக் கொளுவினர். அவர் செய்த அப்பாட்டுக்கள் எல்லாம் முதலிலிருந்து இறுதிவரையில் ஒரே ஓசையாய் நடந்துகேட் பார்க்கு வெறுப்புணர்வினைத் தோற்றுவியாநிற்கின்றன.