பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை. . (எ-கா) ஊர்ப்பக்கத்தே போய் நெல்லும்மலருந் தூவிக் கையாற்றொழுது பெரிதுமுதிர்ந்த மகளிர் நற்சொற்கேட்டு நிற்ப என்க. அருங்கடி மூதூர்-பகைவர் அணுகுதற்கரியகாவல் அமைந் த பழையவர். யாழ் இசை இனவண்டு ஆர்ப்ப-யாழின் நரம் பொலிபோல் ஒலிக்கும் ஓரினமான வண்டுகள் ஆரவாரிக்க; இவை தூவும் முல்லை மலரிற்றேனை நச்சிவந்தன . நாழிகொண் ட - நாழி என்னும் முகந்தளக்குங் கருவியின் உட்பெய்த. நறுவீ -நன்மணங்கமழும் மலர். முல்லை - முல்லைக்கொடி. (க 2 - கஎ) அங்ஙனம் அவர் நிற்கின்றவளவில் பசியகன் றின் வருத்தமிக்க சுழலு தலைநோக்கிய ஓர் இடைப்பெண்: கோவலர் பின்னே நின்று செலுத்த உம்முடைய தாய்மார் இப்போதே வருகுவர்' என்று சொல்வோளுடைய நற்சொல் லைக்கேட்டனம் என்க. நடுங்குசுவல் அசைத்தகையள் - குளிரால் நடுங்குந்தோள் களின்மேற் கட்டினகையளாய். கொடுங்கோல் - வருத்துகின்ற தாற்றுக்கோல். (கப்.) அதனாலும், நின் தலைவன் படைத்தலைவர் தாஞ் செல்லும்முன்னே நற்சொற்கேட்போர் கேட்டுவந்த நிமித் தச்சொற்களும் நன்றாயிருந்தனவாதலானும் என்க. நல்லோர்-படையுள் நற்சொற்கேட்டற்குரியோர். வாய்ப் புள் - வாயிற் பிறந்த நிமித்தச்சொல். பெருமுதுபெண்டிர் தாங்கேட்டுவந்த நற்சொற்கூறித் தலைமகளை ஆற்றுவிக்குமிடத்துத், தலைமகன் சென்றக்கால் நிகழ்ந்த நன்னிமித்தத்தினையும் உடன் எடுத்துக்காட்டி வற் புறுத்துகின்றார் என்பது இவ்வடியினால் இனிது பெறப்படு கின்றது. பகைவாது மண்கொள்ளச் செல்கின்ற வேந்தன் படைத்தலைவர் இங்ஙனம் ஒரு பாக்கத்திலே விட்டிருந்து விரிச் சிகேட்பரென்பது ஆசிரியர் தொல்காப்பியனாராய் சொல்