பக்கம்:முல்லைப் பாட்டு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்க உரைக் குறிப்புகள். லப்பட்டது. இப்பொருள் இவ்வடியினால் இனிது பெறப்படு வதாகவும், இதனை உணராத நச்சினார்க்கினியர் கஅ-வது வரி யிலுள்ள 'நல்லோர்' என்பதனை எ-வது வரியிலுள்ள 'போகி' என்னும் வினையோடுகூட்டி இடர்ப்பட்டும் இப்பொருளே கூறினார்; அங்ஙனம் இடர்ப்பட்டுக்கூட்டிப் பொருளுரைக் கும்வழிப் பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்ட பொருள் அவரால் உரையின்றி விடப்பட்டது. தலைமகன் குறித்துப் போன கார்ப்பருவவரவினைக் கண்டு ஆற்றாளான தலைமகளை ஆற்றுவித்தற்பொருட்டுப் பெருமுது பெண்டிரும் விரிச்சி கேட்டுவந்து ஆற்று விக்கின்றார் என்பது நப்பூதனார் கருத் தாகலானும், மேலெடுத்துச் செல்லும் வேந்தன் படைத் தலைவர் மாத்திரமே விரிச்சி கேட்டற்கு உரியார் ஏனையோர் உரியரல்லர் என்பது தொல்காப்பியனார்க்குக் கருத்தன்றாக லானும், யாங்கூறும் பொருளாற் பெருமுது பெண்டிர் விரிச்சி கேட்டலும் படைத்தலைவர் வாய்ப்புளும் இனிது பெறப்படுவதாக அவர் உரையாற் படைத்தலைவர் நன்னிமித் தம் ஒன்றுமே வலிந்து கொள்ளப்படுதலானும் நச்சினார்க் கினியருரை போலியுரை யென்று மறுக்க. (கக-உங) 'நின் றலைவன், பகைவர் நாடெல்லார் திறைப் பொருளாகக் கவர்ந்து கொண்டு, இங்ஙனந் தானெடுத்த போர் வினையை இனிது முடித்து விரைவில் வருதல் உண்மையே யாம்; மாயோய்! நீ நின் துயரத்தை நீக்கு' என்று அவர் வற் புறுப்பவும் வற்புறுப்பவும் தலைமகள் ஆற்றாளாய்க் கலுழ்ச்சி (மிக்குக் குவளைப்பூவின் இதழை ஒத்த கண்ணிலே முத்து முத்தாய் நீர் துளிப்ப யருத்தி என்க. இனி இங்கு இவ்வாறு உரை கூறுதலை நச்சினார்க்கினி யர் மறுக்கின்றார். அவர் கூறிய மறுப்பு வருமாறு:-'முல்லை என்பது கா சலனைப்பிரிந்த காதலி அவன் வருந்துணையும் ஆற்றியிருக்கும் ஒழுக்கமாம். நப்பூதனார் இதற்கு 'முல்லைப் பாட்டு” என்று பெயமைத்தமையால் இதன் கண் அவ்வொ ழுக்கமே கூறப்படுதல் வேண்டும் என்பது துணிபு; இதற்கு